2018-06-27 15:42:00

அமெரிக்க ஆயர் பேரவை, 3.39 மில்லியன் டாலர் நிதி உதவி


ஜூன் 27,2018. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி திட்டங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, 3.39 மில்லியன், அதாவது, 33 இலட்சத்து 90,000 டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நாட்டிற்கு 500,000 டாலர்கள் உதவியையும் இப்பேரவை கூடுதலாக வழங்கியுள்ளது.

மாத்யூ, இர்மா, மற்றும் மரியா ஆகிய கடும் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பகுதிகளில் துயர் துடைப்பு பணிகளுக்கும், ஹெயிட்டி நாட்டில் நிறுவப்படவிருக்கும் புதிய அருள்பணியாளர் பயிற்சி மையத்திற்கும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டிலும், பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்க விழைவோருக்கு நிதி உதவிகள் வழங்க அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை முன்வந்துள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.