2018-06-08 15:46:00

ராய்கஞ்ஜ் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்


ஜூன்,08,2018. இந்தியாவின் ராய்கஞ்ஜ் (Raiganj) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஃபுல்ஜென்ஸ் அலாய்சியஸ் ட்டிக்கா (Fulgence Aloysius Tigga) அவர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கும்லா மறைமாவட்டத்தின் Katkahiல், 1965ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்த, புதிய ஆயர் ஃபுல்ஜென்ஸ் ட்டிக்கா அவர்கள், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில், கலைகள் இயலில் இளங்கலை பட்டயம் பெற்றிருப்பவர்.

1997ம் ஆண்டில் Muzaffarpur மறைமாவட்டத்திற்காக, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், 1998ம் ஆண்டில் Bettiah மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அதில் சேரந்தார். 2017ம் ஆண்டிலிருந்து, மறைமாவட்ட தலைமைக் குருவாகவும், ராம்நகர் இறையன்னை ஆலயத்தின் பங்குக் குருவாகவும் பணியாற்றி வந்தார், ராய்கஞ்ஜ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஃபுல்ஜென்ஸ்.

கொல்கத்தா திருஆட்சிப் பகுதியைச் சேரந்த, ராய்கஞ்ஜ் மறைமாவட்டத்தில், 95 ஆயிரத்திற்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.