2018-04-18 14:43:00

கொல்லம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்


ஏப்.18,2018. கேரளாவின் கொல்லம் மறைமாவட்டத்தின் ஆயர் ஸ்டான்லி ரோமன் அவர்கள் ஆயர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று ஏற்றுக்கொண்டார்.

2001ம் ஆண்டு கொல்லம் ஆயராகப் பொறுப்பேற்ற ரோமன் அவர்கள், தன் 77வது வயதில் பணி ஒய்வு பெறுவதை முன்னிட்டு, அம்மறைமாவட்டத்திற்கு, புதிய ஆயராக, அருள்பணி பால் ஆன்டனி முல்லசேரி அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

1960ம் ஆண்டு சனவரி 15ம் தேதி பிறந்த முல்லசேரி அவர்கள், 1984ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் பாப்பிறை உர்பானியா பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற முல்லசேரி அவர்கள், பங்கு அருள்பணியாளராகவும், குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

2017ம் ஆண்டு முதல் இவர், கொல்லம் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

கொல்லம் மறைமாவட்டம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கத்தோலிக்க மறைமாவட்டம் என்று, இம்மறைமாவட்டத்தின் வலைத்தளம் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.