ஏப்.02,2018. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா காலத்தில் இருக்கின்றோம். இயேசுவின்
உயிர்ப்பைக் கொண்டாடுவது என்பது, நம் தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகளில் கடவுள் தொடர்ந்து
நுழைகிறார், ஒரே விதமாகச் சிந்தித்துச் செயல்படும் நம் போக்கிற்கும் நம் உறுதிப்பாடுகளுக்கும்
சவால் விடுக்கிறார் என்பதை மீண்டும் நாம் நம்புவதாகும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
சொல்லியுள்ளார். இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின் மையம். இயேசு என்ற நபரை, உலகம்
திரும்பிப் பார்த்தது அவரின் உயிர்ப்பால்தான். இயேசுவின் உயிர்ப்பு, விழுந்தால் விதையாக
விழு, விருட்சமாக எழு என்று நமக்கு எழுச்சியூட்டுகின்றது. இந்தச் சிந்தனைகளுடன், உயிர்ப்புப்
பெருவிழா பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார் அருள்பணி அலெக்சாண்டர், கோயம்பத்தூர்
மறைமாவட்டம்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |