2018-03-24 15:59:00

இதயம் நம் கரங்களோடு இணைக்கப்பட வேண்டும்


மார்ச்,24,2018. நம் ஒவ்வொருவரின் இதயமும் நம் கரங்களோடு இணைக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நற்செயல்களை ஆற்றுவதற்கு நம் செவிகளை இதயங்களோடு இணைக்கவும், நம் இதயங்களை கரங்களோடு இணைக்கவும், இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களின் திருப்பீட பேராயத்தலைவர்,  Marc Quellet, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தலைவர், கர்தினால் Leonardo Sandri, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் செயலர், பேராயர், Giovanni Pietro Dal Toso ஆகியோரை, தனித்தனியே சந்தித்து உரையாடினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.