2018-03-19 14:58:00

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர்


மார்ச்,19,2018. பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Bernard Blasius Moras அவர்கள், நிர்வாகப்பணிகளிலிருந்து ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, புதிய பேராயராக, பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை.

2004ம் ஆண்டு பெல்காம் மறைமாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டு, பெங்களூருவின் ஆயராக நியமிக்கப்பட்ட பேராயர் மொராஸ் அவர்கள், தன் 76ம் வயதில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

1954ம் ஆண்டு பிறந்து, 2006ம் ஆண்டு பெல்காம் ஆயராக நியமிக்கப்பட்ட ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், தற்போது, பெங்களூருவின் பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.