2018-02-15 15:16:00

சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலி


பிப்.15,2018. பிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம், புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாவப்பரிகாரத் திருப்பவனியை தலைமையேற்று நடத்தினார்.

உரோம் நகரின் அவெந்தினோ குன்றில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் துறவு மடத்தைச் சார்ந்த கோவிலில், மாலை 4.30 மணிக்கு ஒரு செப வழிபாட்டை நடத்தியத் திருத்தந்தை, அருகிலிருந்த புனித சபீனா பசிலிக்காவிற்கு, பாவப்பரிகாரப் பவனியைத் துவங்கினார்.

கர்தினால்கள், ஆயர்கள், புனித ஆன்செல்ம் துறவு மடத்தைச் சார்ந்த பெனடிக்ட் சபைத் துறவியர், புனித சபீனா பசிலிக்காவைப் பராமரித்துவரும் புனித தோமினிக் சபைத் துறவிகள் மற்றும் பொதுநிலையினர், இந்தப் பவனியில், திருத்தந்தையுடன் கலந்துகொண்டனர்.

இப்பவனியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபீனா பசிலிக்காவில், மாலை 5 மணிக்கு, திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி, தவக்காலத்தின் அடையாளமாக, திருநீறு வழங்கும் சடங்கையும் நிறைவேற்றினார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.