2018-01-30 15:55:00

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


சன.30,2018. “நன்மைத்தனம், அன்பு, நீதி, ஒருமைப்பாடு ஆகியவை ஒரேடியாக கிடைப்பதல்ல; மாறாக, அவை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை” என்ற சொற்களை, இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான, பிப்ரவரி 02, வருகிற வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 02, வருகிற வெள்ளியன்று, அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 22வது உலக நாளும் திருஅவையில் சிறப்பிக்கப்படுகிறது.

இன்னும், தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவும் இத்தாலிய தன்னார்வலர் அமைப்பினர், பிப்ரவரி 03, வருகிற சனிக்கிழமை, பகல் 12 மணிக்கு, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை 2ம் ஜான் பால் என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவாக இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.