2017-12-19 16:23:00

புனித பாதரே பியோ இடத்திற்கு செல்கிறார் திருத்தந்தை


டிச.19,2017. 'இயேசுவைச் சந்திக்கச் சென்று, செபத்தில் அவருடன் நேரத்தைச் செலவிட்டு, அவரின் கருணை நிறை அன்பில் உங்கள் முழு வாழ்வையும் ஒப்படையுங்கள்' என தன் இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்செவ்வாய்க்கிழமை காலை, ஜோர்டன் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்கள், திருத்தந்தையையும், திருப்பீட உயர் அதிகாரிகளையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இதற்கிடையே, வரும் மார்ச் மாதம் 17ம் தேதி சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் புனித பாதரே பியோ பிறந்த பியெத்ரெல்சீனா பகுதிக்கும், அப்புனிதர் வாழ்ந்து, இறந்த சான் ஜொவான்னி ரொத்தோந்தோவுக்கும் திருப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பாதரே பியோ, ஐந்து காய வரம் பெற்றதன் 100ம் ஆண்டையொட்டியும், அவர் இறப்பின் 50ம் ஆண்டையொட்டியும் இத்திருப்பயணம் இடம்பெறுவதாக திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.