2017-12-19 16:13:00

திருஅவை பெற உள்ள 19 புதிய அருளாளர்கள்


டிச.19,2017. புனிதர் பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென வணக்கத்துக்குரிய 3 இறையடியார்களின் புதுமைகள், 16 மறைசாட்சிய மரணங்கள், 8 பேரின் வீரத்துவ பண்புகள் ஆகியவைகளை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் பட்ட நிலைகளுக்கான படிகளுக்கென இந்த 27 பேரின் பெயர்களை, இத்திங்கள் மாலை, திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து சமர்ப்பித்தார், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ.

பிரான்ஸ் நாட்டில் பிறந்து, 1926ம் ஆண்டு உயிரிழந்த மறைமாவட்ட அருள்பணியாளர், வணக்கத்துக்குரிய‌ Giovanni Battista Fouque, இஸ்பெயினில் 1926ம் ஆண்டு உயிரிழந்த இயேசு சபை அருள்பணியாளர், வணக்கத்துக்குரிய Tiburzio Arnáiz Muñoz, வெனெசுவேலாவில் பிறந்து 1977ம் ஆண்டு உயிரிழந்த வணக்கத்துக்குரிய Maria Carmen Rendiles Martínez ஆகியோரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விவரங்கள், திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இஸ்பெயினில் கிறிஸ்தவத்திற்கு எதிரான தாக்குதல்களின்போது, 1936 மற்றும் 37ம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட அருள்பணி, இறையடியார் Teodoro Illera Del Olmo,  மற்றும், அவரின் 15 உடனுழைப்பாளர்களின் மறைசாட்சிய மரணம் குறித்த விவரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

போலந்து கர்தினால் இறையடியார் Stefano Wyszyński, இஸ்பெயினின் இறையடியார்கள் Alfonso Barzana, Maria Anna di San Giuseppe, இத்தாலியின் இறையடியார்கள் Anna del Salvatore,  Maria Antonia Samá, இரஷ்யாவைச் சேர்ந்த Paolo Smolikowski, அயர்லாந்தின்  Patrizio Peyton, போர்த்துக்கல்லின் Luisa Andaluz ஆகியோரின் பெயர்களும் அவர்களின் வீரத்துவ பண்புகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.