2017-12-11 15:47:00

விசுவாசத்தை செயல்பாடுடையதாக மாற்றும் பிறரன்பு நடவடிக்கைகள்


டிச.11,2017. பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக நம் விசுவாசத்தை மேலும் செயல்பாடுடையதாக மாற்றமுடியும் என்பதை வலியுறுத்தி, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக நம் விசுவாசத்தை மேலும் மேலும் செயல்பாடுடையதாக மாற்றுவதற்கு உதவும் அருளுக்காக இறைவனிடம் வேண்டுவோம்' என திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

மேலும், உலக மனித உரிமைகள் தினமான கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'படைப்புக்கும் பொதுநலனுக்கும் உரிய மதிப்புடன் கூடியதாக எந்த ஓர் அரசியல் நடவடிக்கையும், மனிதனுக்கு சேவையாற்றுவதை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என உரைத்துள்ளார்.

இதற்கிடையே, திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவையின் 22வது கூட்டம் இத்திங்களன்று திருப்பீடத்தில் துவங்கியது. திருத்தந்தையுடன் இணைந்து நடைபெறும் இந்த மூன்று நாள் கூட்டம், வரும் புதனன்று நிறைவுக்கு வரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.