2017-11-20 15:57:00

கர்தினாலின் மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி


நவ.,20,2017. கர்தினால் Andrea Cordero Lanza di Montezemolo அவர்களின் மறைவையொட்டி, அவரின் உறவினர்களுக்கு இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் பெருமதிப்புடன் நோக்கப்பட்ட தலைவர்களுள் ஒருவராகிய கர்தினால்  Andrea Cordero அவர்கள், பாப்புவா நியூ கினி, நிகராகுவா,ஹொன்டுராஸ், உருகுவாய், இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகளில் திருப்பீடத் தூதராகவும், பின் உரோம் நகரின் தூய பவுல் பசிலிக்காப் பேராலய தலைமைக் குருவாகவும் செயலாற்றியதை தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்காக செபிப்பதுடன், அவரின் பிரிவால் துயருறும் உறவினர்களின் துன்பத்தில் தான் பங்குபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

1925ம் ஆண்டு இத்தாலியின் டூரின் நகரில் பிறந்த கர்தினால் Andrea Cordero அவர்கள், 1954ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, 42 ஆண்டுகள் பல்வேறு நாடுகளில் திருப்பீடத்தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். 2006ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.