2017-11-11 16:04:00

நோயுற்றோரிடையே பணிபுரிவோருக்காக செபிப்போம்


நவ.,11,2017. நோயுற்றோரிடையே அர்ப்பணத்துடன் பணிபுரிவோருக்காக நாம் செபிக்க வேண்டியதன் கடமையை வலியுறுத்தி, இச்சனிக்கிழமையன்று, டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நோயாளிகளின் பராமரிப்பில் அர்ப்பணத்துடனும், தியாக உணர்வுடனும் பணிபுரியும் அனைவரையும் நம் செபங்களில் நினைவுகூர்வோம்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகின்றது.

மேலும், இதே நாளில், ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Bernardito  Auza அவர்களையும்,  வியன்னாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பணியாற்றும், பேரருட்திரு Janusz Urbanczyk அவர்களையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நாள் வரை ஈரான் நாட்டின் சார்பில், திருப்பீடத்தூதராகப் பணியாற்றி, பணியிடம் மாறிச் செல்லும் Mohammad Taher Rabbani அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.