2017-11-09 13:16:00

நேர்காணல்– நலமாக வாழ்வதற்கு வழிமுறைகள் – திரு.சைதை துரைசாமி


நவ.09,2017. திரு.சைதை துரைசாமி அவர்கள், அ.தி.மு.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சென்னை பெருநகராட்சியின் மேயராகவும் (2011-2016) பணியாற்றியவர். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்கும், மனித நேயம் என்ற கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயலாற்றி வருகின்றவர், திரு.சைதை துரைசாமி அவர்கள். இவர், இயற்கை உணவுப் பிரியரும்கூட. திரு.சைதை துரைசாமி அவர்கள், தனது மனித நேயம் கல்வி அறக்கட்டளை பற்றி பகிர்ந்து கொண்டதை கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து, நலமாக வாழ்வதற்கு சில வழிமுறைகள் என்று, இயற்கை உணவின் மகத்துவம் பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.