2017-11-08 15:11:00

திருத்தந்தையின் நேர்காணல், "Latinoamerica" என்ற நூலாக...


நவ.08,2017. அனைத்து ஆன்மாக்களையும், மறு உலக வாழ்வையும் சிறப்பாக நினைவுகூரும் நவம்பர் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துள்ள டுவிட்டர் செய்தி மீண்டும் ஒருமுறை இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

"நம்பிக்கை ஒன்றே, நமது உலக வாழ்வின் இறுதியை, மறு உலக வாழ்வின் துவக்கமாக மாற்றக்கூடியது" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக நவம்பர் 8, இப்புதனன்று வெளியாயின.

மேலும், அர்ஜென்டீனாவில் பணியாற்றும் செய்தியாளர் Hernan Reyes Alcaide அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணல், "Latinoamerica" என்ற பெயரில், ஒரு நூலாக வெளியாகியுள்ளது.

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த Telam என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில், இலத்தீன் அமெரிக்காவில் பெண்களின் பங்கு, அரசியல் தலைவர்களின் நிலை, சிறைகளில் நிலவும் சூழல் ஆகியவை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.