2017-10-10 15:59:00

சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்கள்


அக்.10,2017. இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, Shamshabad மற்றும், ஓசூர் சீரோ- சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்களுக்கும், அவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர்களுக்கும், இச்செவ்வாயன்று ஒப்புதல் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள Shamshabad மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இந்நாள்வரை திருச்சூர் துணை ஆயராகப் பணியாற்றிவந்த, ஆயர் Raphael Thattil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வடக்கிலுள்ள ஓசூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Sebastian (Jobby) Pozholiparampil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ஏறத்தாழ ஐம்பதாயிரம் மற்றும், செங்கல்பட்டு, தர்மபுரி, வேலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏறத்தாழ பதினைந்தாயிரம் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளை, இப்புதிய ஓசூர் மறைமாவட்டம் கொண்டிருக்கின்றது.

மேலும், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இராமநாதபுரம் மற்றும் தக்களை மறைமாவட்டத்தின் திருஆட்சிப் பகுதியின் விரிவாக்கத்தையும் ஏற்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.