2017-09-27 16:32:00

திருத்தந்தையின் அக்டோபர் மாத திருவழிபாட்டு நிகழ்வுகள்


செப்.27,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் மாதத்தில் நிறைவேற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி.

அக்டோபர் ஒன்றாம் தேதியான ஞாயிறன்று, இத்தாலியின் Cesena மற்றும் பொலோஞ்ஞா நகரங்களுக்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவழிபாட்டு ஆண்டின் 28ம் ஞாயிறாகிய அக்டோபர் 15ம் தேதியன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், காலை 10.15 மணிக்கு, Andrea de Soveral, Ambrogio Francesco Ferro, Matteo Moreira மற்றும், 27 தோழர்கள், கிறிஸ்டோபர், அந்தோனி, யோவான், Faustino Míguez; Angelo da Acri ஆகிய முத்திப்பேறு பெற்றவர்களைப் புனிதர்கள் என அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.