2017-09-27 16:39:00

Invictusல் கலந்துகொள்பவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து


செப்.27,2017. கானடாவின் டொரென்டோவில், செப்டம்பர் 23ம் தேதி முதல் நடைபெற்றுவரும் Invictus விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், டொரென்டோ பேராயர் கர்தினால் Thomas C. Collins அவர்களுக்கு, திருத்தந்தையின் இந்த வாழ்த்துச் செய்தியை  அனுப்பியுள்ளார்.

தோல்வியடையாத எனப் பொருள்படும், Invictus விளையாட்டுப் போட்டிகள், போரில் படுகாயமடைந்த, மற்றும் நோயுற்ற முன்னாள் படைவீரர்கள், அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக, வேல்ஸ் இளவரசர் Harry அவர்களின் முயற்சியால், உருவாக்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

இவ்விளையாட்டுகள் முதன்முறையாக, 2014ம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்றது. இதில் 13 நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்துகொண்டனர். 

டொரென்டோவில் நடைபெற்றுவரும் இவ்விளையாட்டுகள், செப்டம்பர் 30, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடைகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.