2017-08-21 16:23:00

காயங்களை குணப்படுத்துவதில் தூய ஆவியாரின் பங்கு


ஆக.,21,2017. போர் மற்றும் பயங்கரவாதத்தின் காயங்களை குணப்படுத்துவதில் தூய ஆவியாரின் பங்களிப்பை மையமாக வைத்து இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'முழு உலகிற்கும் அமைதியை வழங்குவதுடன், போர் மற்றும் பயங்கரவாதத்தின் காயங்களை தூய ஆவியார் குணப்படுத்துவாராக' என திருத்தந்தையின் திங்கள் தின டுவிட்டர் செய்தி கூறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கியுள்ள டுவிட்டர் செய்தி, 'கடவுளுடன் நாம் கொள்ளும் உறவை மேலும் வளர்க்க, கடவுளின் அன்பு மற்றும் கருணையை மீண்டும் கண்டுகொள்ளவேண்டிய தேவை எப்போதும் உள்ளது' என உரைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.