2017-08-02 15:04:00

கலைஞர்களை மையப்படுத்தி, திருத்தந்தையின் செபக்கருத்து


ஆக.02,2018. "இன்றைய காலக்கட்டத்தில் வாழும் கலைஞர்கள், தங்கள் படைப்பாற்றல் வழியே, படைப்பின் அழகை ஒவ்வொருவரும் கண்டுணர உதவுவேண்டுமென செபிப்போம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தாக வெளியிட்டுள்ளார்.

‘திருத்தந்தையின் உலகளாவிய வேண்டுதல் வலைப்பணி’ என்ற பெயரில், இயேசு சபையினர் நடத்திவரும் முயற்சியில், திருத்தந்தையர், ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக வேண்டிக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கலைஞர்களை மையப்படுத்தி, ஆகஸ்ட் மாதத்திற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செபக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கலைப்படைப்புக்களின் கருவூலமாக விளங்கும் வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பணி நோக்கங்கள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஒரு மடலில், படைப்பின் அழகை வெளிக்கொணர்வது மட்டுமல்ல, நற்செய்தியைப் பரப்பும் ஒரு கருவியாகவும் கலை விளங்கவேண்டும் என்று எழுதியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.