2017-07-24 16:05:00

நம்மைக் கைவிடாத தந்தையை நோக்கி, கைகளை நீட்டுவோம்


ஜூலை,24,2017. இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, அவரை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம், என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு, தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நமக்கு உதவி தேவைப்படும்போது, தந்தையாம் இறைவனை நோக்கி திரும்புவோம். அவரே நம்மை அன்போடு உற்று நோக்கி கவனித்து வருகிறார், மற்றும், அவர் நம்மை ஒருநாளும் கைவிடாதவர்' என எழுதியுள்ளார் திருத்தந்தை.

@pontifex என்ற முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவருக்கு முன்னதாக, இந்த முயற்சியைத் துவக்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இணைந்து, இதுவரை, 1252 டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.