2017-07-07 15:42:00

மெக்சிகோவில் அருள்பணியாளர் கொடூரமாய் குத்திக் கொலை


ஜூலை,07,2017. மெக்சிகோவில் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர், கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயது நிரம்பிய அருள்பணியாளர், Luis Lopez Villa அவர்கள், தனது San Isidro Labrador பங்குத்தளத்தில், தனது அறையில் இருந்தபோது, ஜூலை 5, இப்புதன் இரவில் குற்றக் கும்பல்களால், கொடூரமாய்க் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என, Nezahualcóyotl மறைமாவட்ட ஆயர், Héctor Luis Morales Sánchez அவர்கள், கவலையுடன் அறிவித்துள்ளார்.

அருள்பணியாளர், Luis Lopez Villa அவர்கள், கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து மிகுந்த கவலையடைந்துள்ள மறைமாவட்ட விசுவாசிகள், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் மற்றும், தங்கள் சமுதாயத்தில், நீதியும் அமைதியும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மெக்சிகோவில் இவ்வாண்டில், இதுவரை மூன்று அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.