2017-06-23 16:11:00

உலக மக்கள் தொகை, 2050ல், 980 கோடியாக உயரும்


ஜூன்,23,2017. உலக மக்கள் தொகை, 2050ம் ஆண்டில், 980 கோடியாக உயரும் என, ஐ.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

உலக மக்கள் தொகையில் 130 கோடி மக்களைக் கொண்டு, இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா, உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீனாவை, 2024ம் ஆண்டில் முந்தும் என அவ்வறிக்கை கூறுகிறது.

தற்போதுள்ள உலகின் ஏறத்தாழ 760 கோடி மக்கள் தொகை, 2030ம் ஆண்டில் 860 கோடியாகவும், 2050ம் ஆண்டில் 980 கோடியாகவும், 2100ம் ஆண்டில் 1,120 கோடியாகவும் உயரும், எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, உலக மக்கள் தொகையில், ஏழாவது இடத்திலுள்ள நைஜீரியா, 2050ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பின்னுக்குத்தள்ளி, மூன்றாவது இடத்திற்கு வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.