2017-06-13 15:23:00

பாசமுள்ள பார்வையில் - பனிப்புயலில் பலியான அன்னை


பல ஆண்டுகளுக்குமுன், இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வு இது. அப்பகுதியில் உள்ள ஒரு மலைப்பாதையில், ஒருநாள், ஓர் இளம் தாய் தன் கைக்குழந்தையைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார். திடீரென அப்பகுதியில் உருவான பனிப்புயல், பயணம் செய்த பலருக்கு ஆபத்தாக முடிந்தது.

பனிப்புயல் சற்று குறைந்ததும், அப்பாதைவழியே, தேடுதல் பணிகள் துவங்கின. அப்போது, பனியால் மூடப்பட்டு, அவ்விளம் தாய் இறந்திருந்ததை, தேடும் குழுவினர் கண்டுபிடித்தனர். அவரது உடலின் மீது ஒரு மெல்லிய ஆடை மட்டுமே இருந்தது. வேறு எந்த கம்பளி உடையும் இல்லை. இதைக்கண்டு, தேடும் குழுவினர் அதிர்ச்சியுற்ற வேளையில், அருகிலிருந்த பாறைக்குப் பக்கத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடும் குழுவினர் விரைந்து சென்று அங்கு பார்த்தபோது, ஒரு சிறு குழந்தையின் உடல், ஒரு பெரிய கம்பளி உடையால் நன்கு மூடப்பட்டிருந்ததைக் கண்டனர். தான் உடுத்தியிருந்த கம்பளி உடையால் குழந்தையைப் பாதுகாத்துவிட்டு, அந்த இளம்தாய் இறந்துவிட்டார் என்பதை, அக்குழுவினர் புரிந்துகொண்டனர்.

முதல் உலகப் போரின்போது, பிரித்தானியப் பிரதமராகப் பணியாற்றி, புகழடைந்த, டேவிட் லாய்ட் ஜார்ஜ் அவர்களே, பனிப்புயலிலிருந்து தன் அன்னையால் காப்பாற்றப்பட்ட அக்குழந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.