ஜூன்,12,2017. "ஏழ்மையின் வழிகளைத் தனதாக்கிக்கொண்டு, அன்பில் வளமிக்கதாய், விசுவாசமுடையதாய், சுதந்திர உணர்வுடனும், வரவேற்கும் குணத்துடனும், மறைப்பணியாளர்களாகவும் திருஅவை செயல்படும்போது, அது ஒளிர்விட்டு மிளிர்கிறது" என்ற செய்தியை, தன் டுவிட்டர் பக்கத்தில், ஜூன் 12, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் திருப்பலியின் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்" என்ற இயேசுவின் மலைப்பொழிவு சொற்களின் எதிரொலியாக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்துள்ளது.
ஏழ்மை, அன்பு, விசுவாசம், சுதந்திரம் வரவேற்கும் குணம், மறைப்பணி போன்றவை, திருஅவை, இவ்வுலகில் ஒளிர்விட அத்தியாவசியமானவை என்பதை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "நாம் அனைவரும், இரக்கம், ஆறுதல் மற்றும், ஒன்றிப்பின் புளிக்காரமாகச் செயல்படவேண்டும் என, மூவொரு இறைவன் திருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது" என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |