2017-06-10 14:51:00

பாசமுள்ள பார்வையில் - எங்கிருந்தாலும், அவரே என் அம்மா


அமெரிக்க ஐக்கிய நாட்டில் வளர்க்கப்பட்ட ஓர் இளம்பெண், தன் அன்னையைப்பற்றி எழுதிய வரிகள்: "25 ஆண்டுகளுக்கு முன், என் அம்மாவுக்கு 22 வயது. அவர் என்னைக் கருவில் தாங்கிய அதே மாதத்தில், தன் கணவரை, அதாவது, என் அப்பாவை இழந்தார். கைக்குழந்தையான என்னை, என் அப்பாவின் உறவினர்கள் குடும்பத்தில் வளர்வதற்கு அனுப்பி வைத்தார், அம்மா. பலர் அவரை, கோழை என்றும், பொறுப்பற்றவர் என்றும் அழைத்தனர். ஆனால், நான் வசதியான சூழலில் வளரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, என் அம்மா இந்தப் பெரியத் தியாகத்தைச் செய்தார் என்பது எனக்குத் தெரியும். எங்கிருந்தாலும், என்றும், அவரே என் அம்மா."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.