2017-06-01 16:16:00

போஸ்னியா-ஹெர்செகொவினா அரசுத்தலைவருடன் திருத்தந்தை


ஜூன்,01,2017. ஜூன் 1, இவ்வியாழன் காலை, போஸ்னியா-ஹெர்செகொவினா கூட்டுக் குடியரசின் தற்போதைய அரசுத்தலைவர், Dragan Čović அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

வத்திக்கானுக்கும், போஸ்னியா-ஹெர்செகொவினா நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில் பல்சமய உரையாடலை வளர்க்க கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.

திருத்தந்தையுடன் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின், அரசுத்தலைவர், Dragan Čović அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால், பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.