மே,29,2017. 'மனித குலத்தின்மீது கொண்ட கருணையால், தம்மையே தாழ்த்துவதில் இறைவன் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை, அன்னைமரியின் தாய்மைக்குரிய பிரசன்னம் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கட்டியெழுப்பும் நோக்கத்தை உள்ளடக்கிய தகவல் துறையை உருவாக்குவதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'அடுத்தவர் குறித்த முற்சார்பு எண்ணங்கள் ஏதுமின்றி, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் வளர்க்க உதவும் தகவல் துறையை கட்டியெழுப்புவதில் அனைவரும் ஈடுபட நான் ஊக்கமளிக்கிறேன்' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.
மே 28, இஞ்ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, 51வது உலக சமூகத் தொடர்பு நாளை சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |