2017-05-09 14:51:00

பாசமுள்ள பார்வையில்: 'பாத்திமாவின் திருத்தந்தை'


1917ம் ஆண்டு மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகரில் மரியன்னை முதல் முறை காட்சியளித்த அதே நாளில், வத்திக்கான் சிஸ்டின் சிற்றாலயத்தில், யூஜேனியோ பச்செல்லி (Eugenio Pacelli) என்ற அருள்பணியாளரை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் பேராயராகத் திருப்பொழிவு செய்தார்.

பேராயர் பச்செல்லி அவர்கள், கர்தினாலாக மாறி, 1939ம் ஆண்டு, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12ம் பத்திநாதர் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியை ஆற்றிவந்த இவர், பாத்திமா அன்னையின் மீது கொண்டிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால், 'பாத்திமாவின் திருத்தந்தை' என்ற புனைப்பெயரையும் பெற்றார்.

பாத்திமா அன்னையின் காட்சிகளுக்குச் சான்றாக விளங்கிய மூவரில் ஒருவரான இறையடியார், அருள்சகோதரி, லூசியா அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி, 'பாத்திமாவின் திருத்தந்தை'யான வணக்கத்திற்குரிய 12ம் பத்திநாதர் அவர்கள், 1948ம் ஆண்டு, உலகின் அனைத்து மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், குடும்பங்கள் ஒவ்வொன்றையும் மரியன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணம் செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.