2017-04-29 17:13:00

அருள்பணியாளர் துறவியருடன் சந்திப்பு, விடைபெறுதல்


ஏப்.29,2017. கெய்ரோ இராணுவ பாதுகாப்பு அரங்கில் திருப்பலியை நிறைவு செய்து, எகிப்து ஆயர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு கெய்ரோவிலுள்ள, காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை இல்லத்திலுள்ள குருத்துவ கல்லூரியில், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவர்களுடன் இறைவார்த்தை வழிபாட்டில் கலந்துகொண்டார் திருத்தந்தை. அங்கு மறையுரை ஒன்றும் நிகழ்த்தினார் திருத்தந்தை.

இதற்குப் பின்னர், அங்கிருந்து விமான நிலையம் சென்று அனைவரையும் வாழ்த்தி, நன்றி கூறி, எகிப்து நாட்டுக்கான இந்த 27 மணி நேர திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மதத்தின் பெயரால் வன்முறை வேண்டாம் எனவும், அமைதிக்காக, கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகச் செபிப்போம் எனவும் திருத்தந்தை விடுத்துள்ள அழைப்புக்குச் செவிசாய்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.