2017-04-04 16:34:00

புதுப்பிறப்பை நோக்கிய நம்பிக்கையின் காலம், தவக்காலம்


ஏப்.,04,2017. "உலக நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நிலக்கண்ணிவெடிகளற்ற ஓர் உலகைக் கட்டியெழுப்புவதற்குரிய நம் அர்ப்பணத்தை மீண்டும் புதுப்பிப்போம்" என இச்செவ்வாய்க் கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், தவக்காலம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை.

'தவக்காலம் என்பது நம்பிக்கையின் காலம். ஏனெனில் இறைவனின் அன்பின் வழியாக நாம், ஆவியில் புதிதாகப் பிறப்பதற்கு, இக்காலம், நம்மை இட்டுச்செல்கிறது’ என, தன் திங்கள் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.