2017-04-01 16:40:00

'இறைவனின் இரக்கம், மற்றனைத்தையும் விட மிகப்பெரியது'


ஏப்.,01,2017. 'மிகக்கடினமான, துன்பம் நிறைந்த வேளைகளிலும், இறைவனின் இரக்கமும், நன்மைத்தனமும் மற்றனைத்தையும் விட மிகப்பெரியது' என, இச்சனிக்கிழமை, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதேநாளில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Armand Ouellet அவர்களையும், ஒன்றிணைந்த மனித வளர்ச்சி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களையும், திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஜெர்மனியின் Kevalaer எனுமிடத்தில் அமைந்துள்ள அன்னை மரியா திருத்தலத்தில், வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெறவிருக்கும் 375வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, தன் பிரதிநிதியாக, கர்தினால் Karl-Josef Rauber அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.