2017-03-30 10:40:00

தவக்காலச் சிந்தனை : அக்கறை கொள்ளுதல்


இந்த தவக்காலத்திலே, இயேசு கிறிஸ்து, நம்மீது அக்கறை கொண்டு தன் உயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகத்தினை சிறப்பாக சிந்தித்துப் பார்க்கின்றோம். வேகமாக நகரும் இக்காலகட்டத்தில், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீது நாம் காட்டும் அக்கறை குறைந்து வருகின்றது. நமது வாழ்வு எந்த ஒரு பிரச்சனையுமின்றி சீராக பயணிக்கும் வரை, அடுத்திருப்பவர்களின் பிரச்சனைகள் நம்மை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. இத்தகைய போக்கு நம்மை சுயநலவாதிகளாக மாற்றி, பிறரிடமிருந்து நம்மை பிரித்து விடுகின்றது. அதனைத் தவிர்த்து பிறரைப் பற்றிய சிந்தனைக்கு இடம் தருவோம். பிறருடைய துன்பங்களையும், தேவைகளையும் நமது போன்று ஏற்று, உதவி செய்ய முன்வருவோம். அடுத்திருப்பவர்கள்மீது நாம் காட்டும் அக்கறை, நமது நலனுக்காக உதவி செய்பவர்கள் இருக்கின்றார்கள் என்ற ஒரு நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கட்டும். (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.) 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.