2017-03-23 16:29:00

"நமது நம்பிக்கை, நம் வாழ்வை இயக்கும் இயந்திரமாகட்டும்"


மார்ச்,23,2017. "நமது நம்பிக்கையின் உறுதி, நம் வாழ்வை இயக்கும் இயந்திரமாகட்டும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் காணப்பட்டன.                   

@pontifex என்ற முகவரியில், திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், போலந்து, இலத்தீன், அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்களைச் சென்றடைகின்றன.

மேலும், மார்ச் 25, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிலான் நகரில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் வேளையில், அவரை வரவேற்கும் அடையாளமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், ஒரே நேரத்தில், மணியோசை எழுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பயணிக்கும் விமானம், மார்ச் 25, காலை 8 மணியளவில் மிலான் நகரின் லினாத்தே (LInate) விமானத் தளத்தில் தரையிறங்கும் வேளையில், அம்மறைமாவட்டத்தைச் சார்ந்த 1,107 பங்குகளில் அமைந்துள்ள, பங்கு ஆலயங்கள், சிற்றாலயங்கள், துறவு இல்ல ஆலயங்கள் அனைத்திலும் கோவில் மணி ஒலிக்கவேண்டும் என்று, மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.