2017-03-16 15:52:00

ஏப்ரல் 2, கார்பியில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்


மார்ச்,16,2017. "கிறிஸ்துவிடமிருந்து வெளிப்படும் அன்பு, கருணை, மற்றும் ஆறுதல் ஆகியவற்றுடன், திருஅவை, ஒவ்வொருக்கருகிலும் இருக்க விழைகிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இவ்வியாழனன்று இடம்பெற்றுள்ளன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2ம் தேதி, ஞாயிறன்று, கார்பி (Carpi) நகரில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.

ஞாயிறு காலை 8.15 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, 10.30 மணிக்கு, கார்பி, மறைசாட்சிகளின் சதுக்கத்தில், திருப்பலி நிகழ்த்தி, நண்பகல் மூவேளை செப உரையும் வழங்குவார்.

கார்பியின் அருள்பணியாளர் பயிற்சி இல்லத்தில், அப்பகுதியின் ஆயர்கள், மற்றும் ஒய்வு பெற்ற அருள்பணியாளர்களுடன் மதிய உணவை அருந்தும் திருத்தந்தை, பிற்பகல் 3 மணிக்கு, கார்பி மறைமாவட்ட துறவியர், அருள்பணியாளர், குருமாணவர்கள் அனைவரையும் சந்திப்பார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பேராலயத்தை வெளியில் இருந்து காணும் திருத்தந்தை, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு அங்கு மலரஞ்சலி செலுத்துவார்.

மாலை 5.30 மணிக்கு கார்பியிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பும் திருத்தந்தை, மாலை 7 மணிக்கு வத்திக்கான் சென்றடைவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.