2017-03-02 15:48:00

பசியால் துன்புறும் குழந்தைகளுக்கு உணவளிக்கவேண்டும்


மார்ச்,02,2017. தவக்காலத்தில், செபம், உண்ணாநோன்பு ஆகிவற்றில் மட்டும் கத்தோலிக்கர்கள் கவனம் செலுத்தாமல், பசியால் துன்புறும் குழந்தைகளுக்கு உணவளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிய கர்தினால் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மணிலா பேராயரும், உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தவக்காலத்தையொட்டி விடுத்துள்ள மேய்ப்புப்பணி மடலில், வறியோர் மீது கவனம் செலுத்துமாறு விண்ணப்பித்துள்ளார்.

பசியில் வாடும் குழந்தைகளை பார்த்தும் பாராமல் செல்வது, கத்தோலிக்கருக்கு அழகல்ல என்பதைக் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இரக்கம் நமது இயல்பாக மாறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Fast2Feed அதாவது, 'நோன்பிருப்பது உணவூட்டவே' என்ற கருத்தில் இத்தவக்காலத்தில் மணிலா உயர் மறைமாவட்டம் துவங்கியுள்ள ஒரு முயற்சியின் வழியே, பிலிப்பீன்ஸ் நாடெங்கும் 16 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உணவு பெறுகின்றனர் என்று UCAN செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.