2017-02-21 15:15:00

மும்பையில் அன்னை மரியா திருவுருவச் சிலை உடைப்பு


பிப்.21,2017. மும்பையின் புறநகர்ப் பகுதியில், சாலையோரமாக அமைந்துள்ள கெபி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த, அன்னை மரியா திருவுருவச் சிலையின் தலையை வெட்டிச் சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள்.

மும்பையில் நகராட்சித் தேர்தல் இடம்பெறும் சூழலில், மத ரீதியான பதட்டநிலை உருவாக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் Sajan K George அவர்கள், கண்ணாடிக் கதவுடன் பாதுகாப்பாக வைக்கப்படிருந்த அன்னை மரியா திருவுருவச் சிலையை அவமதித்துள்ளது, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அன்னை மரியா மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள, அனைத்து மதத்தவரின் ஆன்மீக உணர்வுகளையும் புண்படுத்துவதாக உள்ளது என்றார்.

மும்பையின் புறநகர்ப் பகுதியில், குர்லா மாவட்டத்தில் சாலையோரத்தில் கெபி ஒன்றில் கண்ணாடிக் கதவுகளுடன் பத்திரமாக, இயேசு பாலனைத் தாங்கிய வண்ணம் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் சிலையை உடைத்தவர்கள், இருவர் எனவும் அவர்களின் அடையாளங்கள், அப்பகுதி கண்காணிப்புப் புகைப்பட கருவி வழியாக தெரிய வந்துள்ளதாகவும் காவல் துறை தற்போது அறிவித்துள்ளது.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.