2017-02-15 15:32:00

மியான்மாரை, அன்னை மரியா மட்டுமே ஒன்றிணைக்கமுடியும்


பிப்.15,2017. மியான்மார் நாட்டை, அன்னை மரியா மட்டுமே ஒன்றிணைக்கமுடியும் என்றும், அந்த அன்னையின் பரிந்துரையால் இந்த நாடு தன் காயங்களிலிருந்து குணமாகவேண்டும் என்றும், மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் மாங் போ அவர்கள், தான் வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

அண்மையில் சிறப்பிக்கப்பட்ட லூர்து அன்னை திருநாளையொட்டி, Nyaunglebin எனுமிடத்தில் அமைந்துள்ள மரியன்னையின் தேசியத் திருத்தலத்தில் திருப்பலியாற்றிய கர்தினால் போ அவர்கள், கானா திருமணத்தில் மரியன்னையின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமையை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கூடியிருந்த அந்தத் திருப்பலியில், இத்தகைய ஒன்றிப்பு அன்னையின் உதவியால் நிகழ்ந்த ஓர் அதிசயம் என்று, கர்தினால் போ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அமைதியும், நீதியும் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்று கூறிய கர்தினால் போ அவர்கள், நம்பிக்கையோடு நாம் விண்ணகத்தின் கதவுகளைத் தட்டி, அமைதியின் அரசியாம் மரியன்னையின் மன்றாடுவோம் என்று தன்  மறையுரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.