2017-02-01 15:22:00

பாசமுள்ள பார்வையில்…நல்லவை அனைத்தும் அம்மாவே


தாயை மட்டும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்ல 'அம்மா'. பெண்களை பாசமாகவும், மரியாதையாகவும் அழைக்கவும் 'அம்மா' என்ற சொல் பயன்படுகிறது. அதாவது, பாசத்தோடும் மரியாதையோடும் இணைந்துச் செல்லும் வார்த்தை, 'அம்மா' . குழந்தையாக பிறந்தவுடனேயே நாம் ஒட்டிக்கொள்வது அம்மாவிடம்தான். அங்கிருந்து தொடரும் 'தாயன்பு', சுடுகாடு வரை, கூட வரும். 'அம்மா' என, குழந்தையில் துவங்கும் முதல் வார்த்தை, எல்லாச் சூழல்களுக்கும், அதாவது, துன்பத்திற்கும் இன்பத்திற்கும், கருணைக்கும் கவலைக்கும், ஏன், தர்மத்திற்கும் என, அனைத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. காலில் அடிபட்டால்கூட 'அம்மா' என்றுதான் அலறுகிறோம். ஏனெனில், அர்த்தம் தெரியாத காலத்திலேயே வாயில் நுழைந்த வார்த்தை அது. உயர்வான எப்பொருளுக்கும் பொருந்திப்போகும் 'அம்மா' என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து செயல்படுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.