2017-01-21 15:54:00

கவனமுடன் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுகோள், ஐ.நா.


சன.21,2017.  மிகவும் கவனமுடன் தண்ணீரைப் பயன்படுத்துமாறும், வளரும் நாடுகளில் தண்ணீரின்றி துன்புறும் இலட்சக்கணக்கான சிறுதொழில் விவசாயிகளின் பாதுகாப்பைக் கருதி, தண்ணீர் ஆதாரங்களைப் பாதுகாக்குமாறும், உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளது, ஐ.நா. நிறுவனம் ஒன்று.

FAO எனும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், பெர்லினில் நடத்திவரும் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்நிறுவனத் தலைவர் José Graziano da Silva அவர்கள், ஐ.நா.வின், புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீர் பிரச்சனை பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார்.

மேலும், இலங்கையில், கடும் வறட்சியால், 2006ம் ஆண்டிலிருந்து, ஒன்பது இலட்சத்திற்கு மேற்பட்டோர் மிகவும் துன்புறுகின்றனர் என்று, உலக உணவு திட்ட அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் 25 மாவட்டங்களில், 23, கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இந்த அறிக்கை, இலங்கை அரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews /UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.