2017-01-16 16:30:00

தனி மனித உரிமைகளும் உண்மை அமைதியும்


சன.,16,2017. ஒவ்வொரு மனிதருக்கும் உரிய தனித்தன்மை மீறப்படும் சூழல் இருக்கும்வரை, உண்மையான அமைதி என்ற ஒன்று இருக்கமுடியாது என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ, ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் 9 மொழிகளில் குறுஞ்செய்திகளை பதிவுசெய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, தனி மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படும்போது மட்டுமே உண்மை அமைதி நிலவும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்திங்களன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் நாட்டிற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டின் தூதராகப் பணியாற்றி, தற்போது நாடு திரும்பும் Kenneth Francis Hackett அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.