2017-01-14 16:03:00

சீரோ-மலபார் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்திற்கு துணை ஆயர்


சன.14,2017. கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி தாமஸ் தரயில் (Thomas Tharayil) அவர்களை, அவ்வழிபாட்டுமுறை ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு, இச்சனிக்கிழமையன்று தேர்ந்தெடுத்துள்ளது.

1972ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி சங்கனாச்சேரியில் பிறந்த புதிய ஆயர், தாமஸ் தரயில் அவர்கள், 2000மாம் ஆண்டில், அருள்பணியாளராக, திருப்பொழிவு செய்யப்பட்டார்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், உளவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பல்வேறு இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கின்றார்.

Danahalaya பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்நாள்வரை பணியாற்றி வந்தார், சங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் தாமஸ் தரயில்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.