2017-01-07 14:33:00

இத்தாலியப் பெற்றோர்க்கு கர்தினால் பஞ்ஞாஸ்கோ கடிதம்


சன.07,2016. இத்தாலியில், கத்தோலிக்க மதம் பற்றிய போதனை மற்றும் அதன் கலாச்சார விழுமியத்தை, எல்லாருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது என்று, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.

சனவரி 08, இஞ்ஞாயிறன்று, கடைப்பிடிக்கப்படும், கத்தோலிக்க சமயக் கல்வி விழிப்புணர்வு நாளுக்கென, பெற்றோர்களுக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான, கர்தினால், ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

மதத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்து, பெற்றோர்களுக்கு உணர்த்தியுள்ள, ஜெனோவா பேராயரான, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், கத்தோலிக்க மதத்தின் சாரம், அதன் நீண்ட கால வரலாறு, கலாச்சாரத்தோடு அது கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றை, பெற்றோர் புரிந்துகொள்வது இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.

உறுதிப்பாட்டுடனும், நம்பிக்கையுடனும் கத்தோலிக்கத்தைத் தேர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், இதன் வழியாக, அதன் உலகளாவிய விழுமியங்கள், அதன் வளமையோடு வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.