2017-01-07 14:26:00

28 குழந்தைகளுக்கு, திருத்தந்தை திருமுழுக்கு


சன.07,2016. வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 28 குழந்தைகளுக்கு, திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில், இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு,  திருப்பலி நிறைவேற்றி, 13 பெண் மற்றும் 15 ஆண் குழந்தைகளுக்கு, திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, குழந்தைகளுக்கு, திருத்தந்தையர் திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுகின்றனர்.

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விசுவாசிகள் குழுமத்திற்கு நிறைவேற்றும், காலைத் திருப்பலி, சனவரி 9ம் தேதியிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.