டிச.23,2016. புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, அருளாளர் Faustino Míguez González, இறையடியார் Leopoldina Naudet ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்பெயின் நாட்டவரான, பியாரிஸ்ட் சபை அருள்பணியாளர் Faustino Míguez González (1831-1925) அவர்கள், இறைமேய்ப்பர் பிள்ளைகள் சபையை ஆரம்பித்தவர். இத்தாலியரான இறையடியார் Leopoldina Naudet (1773-1834) அவர்கள், வெரோனாவின் திருக்குடும்ப சகோதரிகள் சபையைத் தொடங்கியவர்.
மேலும், 1936 மற்றும் 1937ம் ஆண்டுகளில், இஸ்பானிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட, கிளாரிசியன் அருள்பணியாளர் Mateu Casals Mas (1883-1936), அச்சபையின் பயிற்சி மாணவர் Teófilo Casajús Alduán (1914-36), அருள்சகோதரர் Ferran Saperas Aluja (1905-36), இன்னும், அவர்களோடு சேர்ந்த 106 மறைசாட்சிகள் குறித்த விபரங்களை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Marseilleல், புனித யோசேப்பு மருத்துவமனையை நிறுவிய பிரெஞ்சு அருள்பணியாளர் Jean-Baptiste Fouque (1851-1926), இத்தாலிய Passionist சபையின் துறவி தூய ஆவியாரின் லொரென்சோ (1874-1953), இஸ்பானிய, திரு இதயங்களின் அருள்சகோதரிகள் மறைபோதக சபையை ஆரம்பித்த அருள்சகோதரி Maria Rafela (1814-99), இயேசுவின் திருஇதய திருத்தூதர்கள் சபையைத் தொடங்கிய இத்தாலியரான அன்னை Clelia Merloni (1861-1930), ஓப்புஸ் தேய் பக்த அமைப்பின் Isidoro Zorzano Ledesma (1902-43) ஆகிய ஐந்து இறையடியார்களின் விரத்துவமான வாழ்வு முறைகள் குறித்த விபரங்களையும் திருத்தந்தை ஏற்றுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |