2016-12-23 15:14:00

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒடிசா முதலமைச்சர் உறுதி


டிச.23,2016. ஒடிசா தலைநகர் கட்டக்-புவனேஷ்வரில் நடந்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், அம்மாநில கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.

கட்டக்-புவனேஷ்வர் நகரிலுள்ள புனித வின்சென்ட் பேராலயத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் பாராட்டினார்.

ஒடிசாவில், கிறிஸ்தவர்களின் இருப்பு நன்றாகவே உணரப்படுகின்றது எனவும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்தார்.

பட்நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.