2016-12-22 16:43:00

சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன்


டிச.22,2016. திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ணதாசன் அவர்கள் எழுதிய `ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

கல்யாணசுந்தரம் என்கிற இயற்பெயரைக் கொண்ட வண்ணதாசன் அவர்கள், வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது என்று 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில் விஷ்ணுபுரம் விருது பெறவுள்ளார்.

இளம் படைப்பாளிகள் அதிகம் வாசிக்க வேண்டும், படைப்பாளிகளாக இருந்து கொண்டும் இப்போதும் நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்கிறோம் என்று, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.