2016-12-21 15:15:00

திருத்தந்தையின் பிறந்தநாளுக்கு பதுவை கைதிகள் வாழ்த்து


டிச.21,2016. நவம்பர் 17, கடந்த சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 80வது பிறந்தநாளைக் கொண்டாடிய வேளையில், அவருக்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தொலைபேசி வழியே தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், முன்னாள் திருத்தந்தைக்கும், இந்நாள் திருத்தந்தைக்கும் பொருளுள்ள வகையில் இருக்கும் மூன்று பரிசுகளை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அனுப்பி வைத்தார் என்று கூறிய செய்தித் தொடர்பகம், இந்த பரிசுகளின் விளக்கங்களை வழங்கவில்லை.

இதற்கிடையே, திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி, இத்தாலியின் பதுவை நகர் சிறைச்சாலையைச் சார்ந்த 60 பேர், Skype வசதியைப் பயன்படுத்தி, திருத்தந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பதுவை சிறைச்சாலையின் ஆன்மீக வழிகாட்டி அருள்பணி மாரியோ போஸ்ஸா (Mario Pozza) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில்,  கைதிகள், சிறைக்காவலர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், நன்றியையும் செபங்களையும் கூறினர் என்றும், திருத்தந்தை, அவர்களுக்கு தன் செபங்களையும் ஆசீரையும் வழங்கினார் என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.