டிச.17,2016. “உங்கள் எல்லாரின் பாசத்திற்கு மிக்க நன்றி. எனக்காகச் செபிப்பதற்கு, தயவுசெய்து மறக்காதீர்கள்”என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.
மேலும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில், அன்னை மரியா காட்சி கொடுத்ததன், நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு மே 12,13 ஆகிய தேதிகளில், பாத்திமா திருத்தலத்திற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடம் அறிவித்தது.
போர்த்துக்கல் அரசுத்தலைவர் மற்றும், அந்நாட்டு ஆயர்களின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை, பாத்திமா திருத்தலத்திற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளார் என, திருப்பீடம் கூறியுள்ளது.
1917ம் ஆண்டு மே 13ம் தேதியன்று, லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறார்க்கு, பாத்திமாவில், அன்னை மரியா, முதன்முறையாக காட்சியளித்தார். அதன்பின்னர், அக்டோபர் வரை, ஒவ்வொரு மாதமும், 13ம் தேதியன்று, அச்சிறார்க்கு ஆறு முறைகள் காட்சியளித்தார் அன்னை மரியா.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |