2016-12-15 14:59:00

திருவருகைக்காலம் : கிறிஸ்து பிறப்பு - தாழ்ச்சியின் செய்தி


இறை நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொண்ட இறை நிகழ்வே இந்த கிறிஸ்து பிறப்பு விழா. தான், தனது, என்ற, அகங்கார நிலை, நம்மை, பல நேரங்களில் மற்றவர்களை பற்றி, அவர்கள் நிலையிலிருந்து சிந்திக்க விடாமல் மாற்றிவிடுகிறது. நாம் காணும் உலகத்திலிருந்து மற்றவர்களை பார்க்கிறோம், அவர்களையும் பார்க்க கட்டாயப்படுத்துகிறோம். இறைவன் மனிதனாகும்போது, கிறிஸ்து பிறக்கிறார். மீட்பின் பிறப்பு நம்மிடையே நிகழ்கிறது. நம் சிந்தனையில் பிறரின் நிலைக்கு மாறும்போது, அங்கே மனிதம் பிறக்கிறது. புதிய  உறவு மலர்கின்றது. நமது அணுகுமுறைகளில், பிறரை, அவர்கள் மனநிலையில் இருந்து புரிந்துகொள்ள முயற்சிப்போம். தாழ்ச்சியில், புனிதராகவில்லையெனினும், குறைந்தது, மனிதராகுவோம். இறை மைந்தன் நம்மில், நம் உறவில், பிறக்கட்டும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.